ரஜினி ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய நல்லகண்ணு !

சென்னையில் குளம், ஏரிகளை தூர் வாரி வரும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை நங்கநல்லூர்,சிட்லபாக்கம் உட்பட்ட பகுதிகளில் இருக்கும் குளம் மற்றும் ஏரிகளை காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் தென் சென்னை மாவட்ட பகுதிகளை சேர்ந்த ரஜினி ரசிகர் மற்ற நிர்வாகிகள் சுத்தப்படுத்தினர். இதனை அறிந்த நல்லகண்ணு அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் அவர்கள், தாய்ப்பால் போல் தூய்மையான அரசியல் செய்யும் அரசியல் தலைவரான நல்லகண்ணு அய்யா அவர்களே ரஜினி ரசிகர்களை வாழ்த்தி இருப்பது பெருமைதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.