மழைநீர் வடிகால் பணிகள் – தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு…!

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர் இறையன்பு. 

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment