தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! எங்கெல்லாம் கனமழை பெய்யக்கூடும்?!

கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்காமல் இருப்பதால், சுற்றுசூழல் மாசடைவது மிகவும் குறைந்துள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதற்கு உதாரணமாக அண்மையில் தோன்றிய பௌர்ணமி நிலவு பூமிக்கு மிக அருகில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

தற்போது , தமிழகத்தில் திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, சிவகங்கை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வாகனம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், தமிழகத்தில் சில இடங்களில் சூறை காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

author avatar
murugan