தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நவம்பர் 19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எண்ணென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 18-ஆம் தேதி காற்றழுத்த வலு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment