தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வரும் 11-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 10ம் தேதி வரை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மழை பெய்ய  வாய்ப்புள்ளது. 11ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி, குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment