மழை பாதிப்பு – நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்!

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது.

கனமழையால், விலை நிலங்கள் நீரில் மூழ்கியது, வீடுகள் சேதமடைந்துள்ளது என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரணம் விளங்கி வருகிறார். அந்தவகையில், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, இன்று கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். கீழ்பூவாணிக்குப்பதில் மழை பாதிப்பு புகைப்படங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரணமும் வழங்கினார். இதன்பின் மழைநீரில் மூழ்கியுள்ள விளை நிலங்களையும் பார்வையிட்டார் முதலமைச்சர்.

அப்போது, வடிகால்கள் முறையாக சீரமைக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment