கல்கி ஆசிரமத்தில் நடத்திய ரெய்டு-ரூ.20 கோடி பறிமுதல்…!

கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 -க்கும் மேற்பட்ட ஆசிரமத்தில் வருமான வரிதுறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
கணக்கில் காட்டாமல் சொத்துக்களை வாங்கியதும் சோதனையில் தெரியவந்தது. நாடு முழுவதும் உள்ள 40 மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் , ஆப்பிரிக்க நாடுகளிலும் அதிக அளவில் நிலம் வாங்கியது வருமானவரிதுறை நடத்திய சோதனையில் தெரியவந்தது.சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஆசிரமத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் உள்ள கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கி மகன் சொந்தமான அலுவலகத்திலும் , ஆந்திராவில் உள்ள சித்தூர் கல்கி ஆசிரமத்தில் சோதனை தொடந்து  நடைபெற்று வருகிறது.

author avatar
murugan