அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார் : திருநாவுக்கரசர்

இன்று இந்திய நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பல தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சென்னை கத்திபாராவில் நேரு சிலைக்கு மரியாதை செலுத்திய திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘ 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார் என்றும், தேர்தலில் ஏற்படும் வெற்றி, தோல்வி ஒரு தலைவரின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக் கூடியதல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரசின் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பில்லை அதனால் ராகுல் பதவி விலகமாட்டார்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment