ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் உள்ளது-ரந்தீப் சுர்ஜிவாலா

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.ஆனால் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவார் என்று தகவல் வெளியாகிவந்தது.

இந்த தகவலுக்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்  ரந்தீப் சுர்ஜிவாலா பதில் அளித்துள்ளார்.அவர் கூறுங்கியில், காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கள், வதந்திகள் வேண்டாம். காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வரவேண்டும்.

காங்கிரஸில் தேவையான மாற்றங்களை செய்ய தலைவர் ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் உள்ளது .காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவது துரதிருஷ்டவசமானது என்று ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

Leave a Comment