உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.!

உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இன்று  டேராடூனில் பதவியேற்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற உத்தரகாண்ட், உ.பி, கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இன்று  டேராடூனில் பதவியேற்றார். இதனால், உத்தரகாண்டின் 12- வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். அவர் முன்னதாக ஜூலை 2021 இல் முதல்வராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காதிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார்.

author avatar
murugan