புதுக்கோட்டை கோவில் தேர் விபத்து.! செயல் அலுவலர் பணியிடை நீக்கம்.!

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்து நடந்த சமயம், பணியில் இருந்த கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் பிரபலமாக இருக்கும் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக சரிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். மேலும், அரிமளம் எனும் ஊரை சேர்ந்த ராஜகுமாரி எனும் 64 வயது மூதாட்டி படுகாயமுற்று அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவர் கடந்த 7-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து நடந்த சமயம், பணியில் இருந்த கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இந்து சமநிலையை துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment