புதுச்சேரி சட்டப்பேரவை; திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் வெளிநடப்பு.!

ராகுல்காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப் பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு.

2019 குஜராத் பரப்புரையில் மோடி பெயருக்கு அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையான போராட்டம் நடத்திவரும் வகையில், இன்று காலை தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவிநீக்கம் குறித்து பேசத்தொடங்கிய காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு, பாஜக உறுப்பினர்களும் பதிலளிக்க, தொடர்ந்து வாக்குவாதம் எழுந்தது.

இதனையடுத்து தொடர் அமளி ஏற்பட்டதால் சபாநாயகர் செல்வம், அமைதியாக இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டார், மேலும் இந்த விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து அனைவரின் மைக் களும் அணைக்கப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment