அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.! புதுச்சேரியில் 38 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.!

மத்திய அரசு ஊழியர்களை போல புதுசேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

விலைவாசி உயர்வை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை அரசு உயர்த்துவது வழக்கமான ஒன்று.

அப்படி தான் அண்மையில், மத்திய அரசு ஊளியர்களுக்கு அகவிலைப்படியானது, 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

புதுச்சேரி அரசு ஊழியர்களும் மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டில் வருவதால், புதுசேரி அரசு ஊழியர்களுக்கும் அதே போல, அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment