பொதுமக்கள் SPB நினைவிடத்தை பார்வையிட இன்றும் நாளையும் மட்டுமே அனுமதி!

பொதுமக்கள் SPB நினைவிடத்தை பார்வையிட இன்றும் நாளையும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உடல் நல குறைவால் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி மறைந்த பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல் திருவலூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பக்கத்தில் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவ்விடத்திலேயே அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அவரது மஹான் சரண் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவ்விடத்தில் பொதுமக்கள் பார்வையிட தற்பொழுது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், அதன் பின் 2 மணி முதல் 5 மணி வரையும் பார்வை நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தினங்கள் மட்டுமே பொதுமக்கள் அவ்விடத்தை பார்வையிட மற்றும் அஞ்சலி செல்குத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal