சீனாவில் நாய் , பூனை இறைச்சி சாப்பிட தடை ..!

  • நாய் , பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும் ,   உண்பதற்கும்  தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம்  அரசுக்கு கோரிக்கை வைத்தது.
  • இதனை ஏற்ற சீன அரசு  நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.

சீனாவில் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொவிட் 19 வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது.

இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கொவிட் 19  வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.இந்த கொவிட் 19 வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகம் அடைகின்றனர்.இதையெடுத்து உகான் நகரில்  பாம்பு, பூனை , வௌவால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உகானை விட சென்ஜென் பெரிய நகரம் என்பதால் இங்கு கொவிட் 19 வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக பயப்படுகின்றனர்.இதன் காரணமாக நாய் , பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும் , இறைச்சியாக  உண்பதற்கும்  தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம்  அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளது.

இதனை ஏற்ற சீன அரசு  நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பன்றி , முயல், மீன், கோழி,  கடல் உணவுகள் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகள் மக்கள் உண்ண அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுவரை கொவிட் 19 வைரசால்  2800 மேற்பட்டோர்  பேர் உயிர் இழந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.