பிரியங்கா காந்தி வீட்டை காலி செய்ய ஒரு மாதம் கெடு! மத்திய அரசு நோட்டிஸ்!

பிரியங்கா காந்தி வீட்டை காலி செய்ய ஒரு மாதம் கெடு.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பை, கடந்த நவம்பரில் மத்திய அரசு திரும்ப பெற்ற நிலையில், அடுத்தக்கட்டமாக  டெல்லியில் பிரியங்கா காந்தி குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய செய்ய வேண்டும் என பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதம்  1-ம் தேதிக்குள் பிரியங்கா அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.