ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் தனது மகனுடன் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி.!

ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தி தனது மகனுடன் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா என கடந்து தற்போது மத்திய பிரதேசத்தில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது  மத்திய பிரதேசத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியுடன் இரண்டாவது நாளாக பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அதில், தனது மகனுடன் இணைந்து ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார்.

மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில், பிரியங்கா காந்தியும், அவரது மகன் ரிஹான் வத்ராவும் பங்கேற்றனர். ராகுல் காந்தியுடன், ப்ரியங்கா காந்தியும் தனது மகனுடன் ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டதால் வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment