அணுசக்தி திறன் கொண்ட”பிருத்வி -2 ஏவுகணை” சோதனை வெற்றி.!

அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிசா கடற்கரையின் சோதனை நிலையத்திலிருந்து ஆயுதப்படைகளுக்கு பயனர் சோதனையின் ஒரு பகுதியாக இந்தியா தனது அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணையின் மற்றொரு இரவு சோதனையை வெற்றிகரமாக நேற்று நடத்தியது.

திரவத்தால் இயக்கப்படும் பிருத்வி -2 ஏவுகணை 250 கி.மீ இலக்கை தாக்கும் திறனை கொண்டது. மேலும், ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிஆர்டிஓ உருவாக்கிய முதல் 9 மீட்டர் உயரமான ஏவுகணை இது ஆகும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.