ஒரு நாள் பயணம்…இன்று இமாச்சல பிரதேசத்திற்கு செல்லும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி,இன்று இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,இன்று இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.அதன்பின்னர்,இன்று இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்.

குறிப்பாக,11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.இதற்கிடையில் இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதே சமயம்,சுமார் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரேணுகாஜி அணை திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.