நாளை பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு செல்கிறார்..!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 20-ம் தேதி) ஜம்மு செல்கிறார். நாளை காலை 11:30 மணியளவில், ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவும், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இந்தத் திட்டங்கள் சுகாதாரம், கல்வி, ரயில், சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவை. நிகழ்ச்சியின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 1500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார். “விக்சித் பாரத் விக்சித் ஜம்மு” என்ற திட்டத்தின் பிரதமர் உரையாடுவார் என கூறப்பட்டுள்ளது.

author avatar
murugan

Leave a Comment