இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இரண்டு துறைகளிலும் மிகவும் பிரபலமான  நடிகர் இர்பான் கான்.இவருக்கு ஏற்பட்ட பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அந்த மருத்துவமனையில்,அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தார்.இர்பானின் மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இர்பானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் பதிவிட்ட பதிவில், இர்பான் கானின் மறைவு சினிமா  உலகிற்கு ஒரு இழப்பாகும். வெவ்வேறு  பிரிவுகளில் அவர் செய்த  நடிப்பால்  நினைவுகூரப்படுவார்.அவரது ஆத்மா  சாந்தியடையட்டும்  என்று பதிவிட்டுள்ளார்.