அதிகரிக்கும் கொரோனா தாக்கம்-மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109  ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 292 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நாளுக்கு நாள் பரவல் அதிகாகி கொண்டே செல்கிறது.இதனால் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி காட்சி மூலமாக  நடைபெற்று வருகிறது.