பீகாரில் இன்று நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.!

பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் பீகாரில் உள்ள ஒன்பது நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவைகளை தொடங்கி வைக்கிறார். இந்த ஒன்பது நெடுஞ்சாலைத் திட்டங்களில் சுமார் 350 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை ரூ. 14,258 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற மாநிலத்தில் ரயில்வே, பாலங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மோடி அன்மையில் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

 .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.