” கேடில் விழுச்செல்வம்” திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் பேசியுள்ளார்.  

இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், சுகாதாரம் மற்றும் விளையாட்டு தொடர்பான பல மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் பேசியுள்ளார்.

” கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை  “

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார். கல்வி எனும் அதிகாரத்தில், குறள் எண் 400-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.