குஜராத்துக்கு மட்டும் சாதகமாக செயல்படுகிறார் பிரதமர் மோடி – கேஎஸ் அழகிரி குற்றசாட்டு!

குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை காட்டுகிறார் என பிரதமர் மோடி மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி குற்றசாட்டு. 

குஜராத் மாநிலத்துக்கு மட்டும் பிரதமர் மோடி சாதகமாக செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நிதி ஒதுக்குவதில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வரை பாஜக ஆளும் மாநிலத்திற்கு மட்டும் பிரதமர் அள்ளி கொடுக்கிறார் என குற்றசாட்டியுள்ளார்.

குஜராத்துக்கு மட்டும் பிரதமர் போல் மோடி செயல்படுவது பதவி பிரமாணத்தின் போது அவர் ஏற்ற உறுதிமொழியை மீறும் செயலாகும் என்றும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலை செய்யும் மோடி அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்