மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் குடியரசு தலைவர்..!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கினார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்வில் பத்ம பூஷன் விருதுகளை வழங்கினார். அப்போது, மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கினார். இந்த விருதினை பிபின் ராவத்தின் இரண்டு மகள்களும் பெற்று கொண்டனர்.

பத்மஸ்ரீ விருது 

தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், சதிர் நடன கலைஞர் முத்தம்மாள், கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி நடராஜன்,  ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பத்மபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.