2047ஆம் ஆண்டுக்குள் ஓர் பொன்னான புதிய தேசத்தை கட்டமைக்க வேண்டும்.! குடியரசு தலைவர் உரை.!

2047ஆம் ஆண்டுக்குள் பொன்னான அத்யாயங்களை கொண்ட ஒரு தேசத்தை நாம் கட்டமைக்க வேண்டும். உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது தற்போது பெருமளவு மாறியுள்ளது. தனது முதல் நாடாளுமன்ற உரையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேச்சு.

நாளை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டு கூட்டதொடர் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு , தான் குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நாடாளுமன்றம் வந்துள்ளார்.

குதிரைப்படை புடைசூழ தனது வாகனத்தில் கம்பீரமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடளுமன்றம் வந்திறங்கிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்ற வாயிலில் நின்று வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பை ஏற்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து தனது முதல் நாடாளுமன்ற உரையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றி வருகிறார். இதில் அவர் ஆளும் பாஜக அரசின் சாதனைகளை குறிப்பிட்டும், சரவேதச அரங்கில் நம் நாட்டின் நிலைப்பாடு குறித்தும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.

அவர் குறிப்பிடுகையில், நமது இந்திய நாடு தன்னிறைவு பெற்ற நாடாக வேகமாக முன்னேறி வருகிறோம். உலக அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. வரும் 2047ஆம் ஆண்டுக்குள் பொன்னான அத்யாயங்களை கொண்ட ஒரு தேசத்தை நாம் கட்டமைக்க வேண்டும். உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது தற்போது பெருமளவு மாறியுள்ளது. என குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவில் இன்று அச்சமற்ற மற்றும் தீர்க்கமான அரசாங்கம் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது முதல் முத்தலாக் ஒழிப்பு வரை நமது அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

உலக பிரச்சினைகளுக்கு கூட இந்தியா தீர்வுகளை வழங்கி வருகிறது. இன்று, நாட்டில் நிலையான, அச்சமற்ற மற்றும் தீர்க்கமான அரசாங்கம் உள்ளது. அது பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. சுயசார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்.

வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கமும் செழிப்பாக இருக்கும். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் வழி காட்ட இளைஞர்களும் பெண்களும் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும். இளைஞர்கள் இரண்டு படிகள் முன்னால் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.

இன்று, ஒவ்வொரு இந்தியனின் தன்னம்பிக்கை மிக அதிகமாக உள்ளது மற்றும் உலகம் நம்மைப் பார்க்கும் கருத்து நம்பமுடியாதது. அமிர்த காலத்தின் இந்த 25 ஆண்டு காலம் சுதந்திரத்தின் பொற்காலத்தையும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதையும் குறிக்கிறது. இந்த 25 ஆண்டுகள் நம் அனைவருக்கும் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கமும் வளமான நாடாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியா ஒரு நாடாக இருக்க வேண்டும், அதன் இளைஞர் சக்தியும் பெண் சக்தியும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் வழிகாட்டுவதற்கு முன்னணியில் நிற்க வேண்டும். ஊழலை ஒழிக்க அரசாங்கத்தால் பயனுள்ள வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் தற்போது தண்ணீர் வசதி பெற்றுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment