தமிழக வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜுனா விருது வழங்கிய ஜனாதிபதி!

தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது.

2022-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் விருதுகளை வழங்கி வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. வாழ்நாள் சாதனையாளராக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு. இதுபோன்று, இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருதும் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment