மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

மெக்சிகோவில் நேற்று இரவு 9.19 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் பவிஸ்பே என்ற நகரின் மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.