டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர்வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.