புதுச்சேரியில் நாளை தொடங்கவிருந்த பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு ….!

புதுச்சேரியில் நாளை 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில், அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் தொடங்கவிருந்த ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்குவதும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal