திருமண பந்தத்தில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அதனால் நான் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டேன். – பூஜா சிங், ஜெய்ப்பூர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் பெண் பூஜா சிங் இம்மாதம் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி திருமணம் செய்யும் போது எந்தெந்த சடங்குகள் செய்வார்களோ அது அத்தனையும் செய்யப்பட்டது.
இந்த திருமணம் பற்றி பூஜா சிங் கூறுகையில் , திருமண பந்தத்தில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை கெட்டுப் போகிறது. சிலரது வாழ்க்கை இதனால் மோசமாக பாதிக்கப்படுகிறது. அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதனால் நான். நான் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டேன் என கூறி, அதிர வைத்தார் மணப்பெண் பூஜா சிங்.