ஒரே மேடையில் சூப்பர் ஸ்டார்- உலக நாயகன்..பிரமாண்டமாக நடைபெறும் “பொன்னியின் செல்வன்” திருவிழா.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்ரஹ்மான் இசைமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து டீசர், மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்திற்கான இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்கின்றனர். இதனை லைக்கா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஒரே மேடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்ளவதால்,  பொன்னியின் செல்வன் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் கலந்து கொண்டு இவர்கள் இருவரும் என்ன பேச போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment