பொள்ளாச்சி விவகாரம்…!! இயக்குனர் கார்த்திக் தங்கவேலன் ஆக்ரோஷமான பதிவு….!!!

  • பொள்ளாச்சியில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்.
  • அடங்காமாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த ஒரு பெண் மட்டுமல்லாது 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காம கொடூரனின் வலையில் சிக்கி பரிதவித்துள்ளனர்.

இந்நிலையில், இதற்க்கு பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடங்காமாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “வாய்ப்பு கிடைத்தால் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்களை அவர்களது பெற்றோர் முன்பே எரிப்பேன், விசாரணை நடத்தி தாமதிக்க வேண்டாம். உடனே குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment