சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.! சிசிடிவி காமிராக்கள்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வருடந்தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அந்தவகையில் இந்த வருடம் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் சேவை, பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும், ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களில் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

மேலும், சென்னை கோட்டை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.