நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள போலீசார் அனுமதி.!

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு மும்பை போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர், சல்மான் கான் ஓர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்தார். அந்த விவகாரம் தொடர்பாக சல்மான் கான் மீது கொலை மிரட்டல் விடுத்து நிழல் உலக தாதா பிஷ்னாய் குருப்பிடம் இருந்து, மிரட்டல் கடிதம் வெளியாகி வந்தது.

அதனை தொடர்ந்து சல்மான் கான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இருந்தாலும், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மும்பை போலீசாரிடம் சல்மான் தரப்பு விண்ணப்பித்து இருந்தது.

அதனை தொடர்ந்து, அந்த விண்ணப்பத்தின் படி , தற்போது அவருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment