இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை.?

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த உரையாடலில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி ஊரடங்கை நீடிப்பதாக ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார் என்றும் இந்தியா ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால் தான், பல வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவிற்கு ஏற்படவில்லை என கூறியுள்ளார். இந்த நேரத்தில் ஊரடங்கை தளர்த்திக்கொண்டால், இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் வீணாக போய்விடும் என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்