ராகுல்காந்தியின் பாதையாத்திரை குறித்து பாஜவினர் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 8-ஆம் நாளை தொட்டுள்ளது.
‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற தலைப்புடன் பாஜக ட்வீட் செய்தது.
இதுகுறித்து, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியஅவர், பிரதமர் மோடியின் உடைகள் ஜெர்மனி, இத்தாலியில் தயாரிக்கப்படுபவை. ராகுலின் டீ-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டவை. ராகுல்காந்தியின் பாதையாத்திரை குறித்து பாஜவினர் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.