காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது.
இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி
இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக கூறப்படவில்லை. மொத்தப் பணத்தின் அளவு சுமார் 200 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், இந்த தொகை பலங்கிர் மாவட்டத்தில் உள்ள பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் சம்பல்பூர் மற்றும் சுந்தர்கர், பொகாரோ மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி என பல்வேறு இடங்களில் கடந்த புதன் கிழமை முதல் இந்த சோதனை நடைபெற்று வந்துள்ளது. கட்டுக்கட்டாக பணம் சிக்கியதால் அதனை எண்ணுவதற்கு பணம் என்னும் மிஷின் கொண்டு வரப்பட்டது . ஆனால் மிஷின் மூலம் ஓரளவுக்கு மட்டுமே எண்ண முடியும் என்பதால் இன்னும் பணம் எண்ணும் பணி தொடர்வதாக கூறப்படுகிறது.
இந்த ரெய்டு, பணம் பறிமுதல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், நாட்டு மக்கள் இந்தக் கட்டு கட்டான ரூபாய் நோட்டுகளை பார்த்துவிட்டு தங்கள் தலைவர்களின் (காங்கிரஸ்) நேர்மையான பேச்சுகளை கேட்க வேண்டும் என விமர்சித்தார்.
மேலும், பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் மக்களுக்கு திருப்பித் கொடுக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…