கொரோனாவே குறையாத சூழலில் அமெரிக்காவில் அணில் ஒன்றுக்கு “பிளேக்” தொற்று உறுதி!

அமெரிக்காவில் ஜூலை மாதம், 11-ம் தேதி அன்று அணில் ஒன்றுக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் பிளேக் தொற்று உறுதியானது தெரியவந்தது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், “இந்த வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை” என கொரோனா வைரஸின் வீரியம் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.

மேலும், உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், வடசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் புதிதாய் ஒரு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. “பிளேக்” எனும் அந்த புதிய வகை வைரஸ், தற்பொழுது வடசீனாவில் பரவிவருகிறது.

“மர்மோட்” எனப்படும் ஒருவகை அணிலின் கறியை சாப்பிட்டதால், அந்த வைரஸ் பரவியது என கூறப்படுகிறது. இதனால் அணில் கறியை மக்கள் உண்ண வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிகுறிகள், மூச்சுத்திணறல், தீவிர காய்ச்சலே ஆகும். மேலும் இதை கவனிக்கவில்லை என்றால் அந்த வைரஸ் தொற்று, சம்பந்தப்பட்ட நபருக்கு 24 மணி நேரத்தில் உடல் முழுக்க பரவி, உயிரிழக்க வாய்ப்புள்ளகாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு அணிலுக்கு பிளேக் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மோரிசன் எனும் இடத்தில் ஜூலை மாதம், 11-ம் தேதி அன்று அணில் ஒன்றுக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் பிளேக் தொற்று உறுதியானது தெரியவந்த நிலையில், அம்மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.