பிலிப்பைன்ஸ்சில் சாலை விபத்தில் 20 பேர் பலி!தொடரும் சோகம் …

வடக்கு பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் வழிபாட்டுக்காக பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த வேன் மீது பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியதில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த விபத்து வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “லா யூனியன் மாகாணத்தில் ஆகூ என்ற நகரில் விடிகாலை நடந்த் இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் சிறிய வேனில் பயணித்தவர்கள். மேலும் 10 வேன் பயணிகள், ஓட்டுநர், 17 பிற பேருந்து பயணிகள் காயமடைந்துள்ளனர்” என்றார்.

மோதிய வேகத்தில் வேனின் இன்ஜின் பெயர்ந்து விழுந்தது. வேனில் இருந்த பயணிகள் ரோமன் கத்தோலிக்க திருக்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

பிலிப்பைன்சில் பாதுகாப்பற்ற சாலைகள், மோசமான சட்ட அமலாக்கம், அலட்சியமாக ஓட்டுதல் ஆகியவற்றினால் விபத்துகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன.

source: dinasuvadu.com

Leave a Comment