2-ம் கட்ட தேர்தல் : எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது ?

  • இன்று 2-ம் கட்ட தேர்தல்  நடைபெற்று வருகிறது.
  • 2-ம் கட்ட தேர்தலில் 77.73 %  வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும்  என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி காலியாக உள்ள 91,975 பதவி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த காலியிடங்களில் முதல்கட்டமாக  45,336 பதவி இடங்களுக்கான தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.

நேற்று  46,639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல்  நடைபெற்றது.ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.பின்பு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.  வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை ‘சீல்’ வைக்கப்பட்டது .மேலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற 2-ஆம் கட்ட தேர்தலில்  77.73 %  வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.