கைலாசாவில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் – மதுரை விளையாட்டுக் கழகம் கோரிக்கை.!

கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என்று மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை

பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள நித்தியானந்தா கைலாச என்ற தனி நாட்டை உருவாகியுள்ளதாகவும், அதற்கு தனி ரிசர்வ் பேங்க், தனி கரன்சி என பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கைலாச நாட்டில் வர்த்தகம் செய்ய நாணயங்கள் என 5 வகையான கரன்சிகளை வெளியிட்டார். நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த நித்யானந்தா, அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தனது கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு பின்னரும் கோரிக்கை பட்டியல் நிறைவு பெறுவதாக இல்லை. இப்போது புதிதாக கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என்று மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கையில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது மிகவும் சவாலாக உள்ளதாகவும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நித்தியானந்தா எப்போது பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்