எலெக்ட்ரீஷியன்கள்,பிளம்பர்ஸ் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

எலெக்ட்ரீஷியன்கள்,பிளம்பர்ஸ் உள்ளிட்ட சுய தொழிலை மேற்கொள்ளுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனவைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.அதாவது சிவப்பு,ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியை பொருத்தவரை  4549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.1362 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.64 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு இடையில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,   33 % ஊழியர்களுடன் தனியார் அலுவலங்கள் இயங்கலாம்.ஐடி நிறுவனங்கள்,கால் சென்டர்கள் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்கலாம் என்று  கூறியுள்ளார்.பொதுப்போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு தான் இருக்கும்.எலெக்ட்ரீஷியன்கள்,பிளம்பர்ஸ் உள்ளிட்ட சுய தொழிலை மேற்கொள்ளுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.