2024-ல் மிகப்பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு மக்கள் கொடுக்கவுள்ளனர்- செல்லூர் ராஜூ

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ” அதிமுக சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. அதிமுக ஒரு பிரகாசமான எதிர்காலத்தை மீண்டும் உருவாக்கின்ற வகையில் விக்ரமாதித்தியன் கதை போல மீண்டும் விக்ரமாதித்தியன் உடைய சாகசங்கள் தொடர்கிறது. அவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து  நிகழ்த்துவார்.

இந்த ஆண்டு மிகப்பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு மக்கள் கொடுக்க உள்ளனர். தமிழகத்தில் மக்கள் ஒரு முகமாக அதிமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். பத்தாண்டு காலம் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் எந்த ஒரு விலைவாசி ஏற்றவும் இல்லாமல் மக்களுடைய பொருளாதார நிலை ஏற்ப விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டது. இருப்பினும் உயர்ந்த விலைவாசிகளை அரசும் முனைப்பாக முன் நின்று விலைவாசியை கட்டுக்குள் வைத்தது” என தெரிவித்தார்.

 

author avatar
murugan