மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் -ராதாகிருஷ்ணன்

மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஊரடங்கால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.முகக்கவசம் மூலமே நுண்கிருமி  பரவுவதை தடுக்க முடியும் .காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மறைக்க வேண்டாம்.கொரோனா அறிகுறி இருந்தால் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.