மும்பையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!

மும்பையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,00,070 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் ரே நாளில் 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,371 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு ஒரே நாளில் 923 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,00,070 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,940 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 19,064 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைககம் தெரிவித்துள்ளது.