1 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அதிக அளவில் மக்கள் வெளியில் நடமாட கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேவைக்கேற்ப இ பாஸ் உத்தரவு பெற்று அதன் பின்னரே மற்ற மாவட்டங்களுக்கு செல்லலாம் என தமிழ்நாட்டில் உத்தரவும் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே மக்களை அதிகளவில் பரிசோதித்து எங்கிருந்து வருகின்றனர் என்று ஆராய்ந்து பார்த்து அனுப்பக்கூடிய இந்த சூழ்நிலையிலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் ஒருவர் தங்கத்தை பதுங்கிக் கொண்டு வந்துள்ளார்.

சுமார் ஒரு கோடி மதிப்புள்ள இந்த தங்கம் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு உள்ளது. இதை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர், 1.77 கிலோ தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மேலும் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Rebekal