தனக்குதானே ‘கண்ட்ரோல் இல்லாதவர்கள்’ சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

தனக்குதானே ‘கண்ட்ரோல் இல்லாதவர்கள்’ சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை என ஜெயக்குமார் கருத்து குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கரூரில் கண்ரோல் இல்லை என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூர் மாவட்டத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அதிமுக, எப்படியாவது செய்திகளில் இடம் பெற்றுவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ‘கரூரில் கண்ட்ரோல் இல்லை’ என ‘மெயின்ரோடு’ என்று எல்லோராலும் புகழப்படுகிற திரு.ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.

மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது! தனக்குதானே ‘கண்ட்ரோல் இல்லாதவர்கள்’ சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment