சீமான் மேடையில் செய்த செயலை மக்கள் வரவேற்கவில்லை – பிரேமலதா விஜயகாந்த்

சீமான் – திமுக இடையே நிலவும் மோதலை முற்றிலும் ஒரு அரசியலாக தான் பார்க்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செய்த செயலை மக்கள் வரவேற்கவில்லை. இதற்கு பிரதிபலமாக திமுகவினர் மேடையில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு தனக்கு கருத்து சுதந்திரம் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டுதல், வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள். இது அனைத்தும் நான் அரசியலாக தான் பார்க்கிறேன் என்றும் இதில் சொல்வதற்கு எதுவும் கிடையாது எனவும் சீமான்- திமுக தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.

இது முற்றிலும் ஒரு அரசியலாக தான் பார்க்கிறேன். தங்களை அடையாளப்படுத்தி கொள்ளவும், தங்களை வெளியில் காண்பித்துக் கொள்ளவும் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதற்குமுன் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். கட்சியில் செயல்தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால் புதியதாக செயல் தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்